பசுமை தமிழ்நாடு இயக்க நாள் நிகழ்ச்சி

பசுமை தமிழ்நாடு இயக்க நாள்  நிகழ்ச்சி

பசுமை தமிழ்நாடு இயக்க நாள்   நிகழ்ச்சி.

உலகிலேயே மொழிக்கென அமையப்பெற்ற 
பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம். அதன் வளாகத்தில் "பசுமை தமிழ்நாடு இயக்க நாள்"   நிகழ்ச்சி மரக்கன்று நட்டு வளர்க்கும்  சிறப்பு நிகழ்வாக இன்று 24.09.2025
காலை நடைபெற்றது.
மரியாதைக்குரிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் இ. ஆ. ப. அவர்கள் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.    
 கவின் மிகு தஞ்சை இயக்கத்தின் தலைவர் திருமதி ராதிகா மைக்கேல் அவர்கள் தமிழ் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணை வேந்தர்கள் பேரா. அமுதா அவர்கள் பேரா.நாகஜோதி அவர்கள், பதிவாளர் பன்னீர்செல்வம் அவர்கள், வனத்துறை அலுவலர் திரு. கிஷ்ணமூர்த்தி அவர்கள், அறிவுசார் மைய இயக்குநர் பேரா. வெ. சுகுமாரன் அவர்கள், தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் பங்கேற்ற  பல மாநில மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டார்கள்.


 பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், அரிமா. குருநாதன் அவர்கள்,
கவின் மிகு தஞ்சை இயக்கத்தின் பசுமை படை தொண்டர்கள் மரக்கன்றை நட்டார்கள்.

 "சோழ மண்டல பட்டாளம்",
"ஞானோதயா" தொண்டர்கள், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட
 பலர் கலந்து கொண்டு " "பசுமை தமிழ்நாடு இயக்க நாள் " சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் 
நிகழ்ச்சி  நிறைவு பெற்றது.
                  தொகுப்பு  தஞ்சை ந. இராமதாசு.

NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.





No comments

Powered by Blogger.